Monday, January 20, 2014

குன்னுர் - குடந்தை, குடந்தை- குன்னுர்

நீலகிரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா




நீலகிரி மாவட்ட சங்க அலுவலக திறப்புவிழா மற்றும் சேவைக் கருத்தரங்க சிறப்புக்கூட்டம்16-01-2014 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர்.ரங்கன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக நமது சம்மேளன கொடியை தோழர். ஜெயராமன் அவர்கள் ஏற்றிவைத்தார். சங்க அலுவலகத்தை நீலகிரி மாவட்ட துணை பொதுமேலாளர் திருமதி. சந்திரிகா அவர்கள்  திறந்து வைத்தார். தலைவர்களின் படத்தை தோழர்கள். மோகன்தாஸ், சுந்தரமூர்த்தி அவர்கள் திறந்துவைத்தனர். சேவை கருத்தரங்க சிறப்பு கூட்டம் காலை 11.00 மணிக்கு மாவட்ட பொருளர்  தோழர்.ஜேவியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உதவி மாவட்ட செயலர் தோழர்.ஜெயபால்அவர்கள் அனைவரையும்  வரவேற்று பேசினார். மாநில உதவி செயலர் தோழர். ராபர்ட்ஸ் துவக்கவுரை ஆற்றினார். 

 

இவ்விழாவில்  துணை பொது மேலாளர்  திருமதி.சந்திரிகா அவர்கள், உதகை கோட்ட  பொறியாளர்  திரு. இந்திர தேவன் அவர்கள், தோழமை சங்க தோழர்கள்.சுரேந்திரன் (BSNLEU), கணேஷ் (SNEA),  வெங்கடசலபதி குரு  (AIBSNLEA), மாதவன் (AITUC), விஸ்வநாதன் (AIBSNLPWA), கென்னடி (TNTCWU) ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர். மாவட்ட செயலர் தோழர் ராமசாமி, குன்னூர் உதவி பொது மேலாளர் திரு. முத்தியால் ஆகியோர்  சேவை கருத்தரங்க உரையாற்றினர். 

சேலம் மாவட்ட செயலர் தோழர்.பாலகுமார்   மற்றும் மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் தோழர் குடந்தை விஜய்  ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்புரையுடன் மாவட்ட பொருளர் தோழர்.ஜெயராஜ் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

விழாவில் தோழமை சங்க தலைவர்கள்,   மாவட்ட சங்க கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி  தோழர்கள் என 150 க்கும் மேற்பட்ட  தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment